குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

தஞ்சை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் ஸ்ரீராம் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ரகுராமன். இவருடைய மகன் முரளிதரன் (வயது21). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து முரளிதரனை குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி முரளிதரனை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story