போலீசாரை அவதூறாக பேசிய வாலிபர் கைது

போலீசாரை அவதூறாக பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பேட்டை:
நெல்லை பேட்டை செக்கடி பகுதியைச் சேர்ந்தவர் கொம்பையா மகன் சங்கர் (வயது 30). இவரது நண்பரான ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனை ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்ற சங்கர், அங்குள்ள போலீசாரிடம் பாண்டியராஜனை எவ்வாறு விலங்கு மாட்டி சிறைக்கு அழைத்துச் செல்லலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததாகவும், அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





