பணம் பறித்த வாலிபர் கைது

திண்டுக்கல்லில், தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 25). கூலித்தொழிலாளி. நேற்று இவர், மேட்டுப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பேகம்பூரை சேர்ந்த ஹாரீஸ் முகமது (22) என்பவர், முகமது உசேனை வழிமறித்தார்.
பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.200-ஐ பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து தெற்கு போலீசில் முகமது உசேன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹாரீஸ் முகமதுவை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





