சாராயம் தயாரிக்க 250 லிட்டர் ஊறல் போட்ட வாலிபர் கைது



சாராயம் தயாரிக்க 250 லிட்டர் ஊறல் போட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் அருகே செஞ்சேரியில் நேற்று அதிகாலை சாராயம் தயாரிக்க ஊறல் போட்டுள்ளதாக பெரம்பலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது செல்வராஜ் என்பவரது மாட்டு கொட்டகையில் சாராயம் தயாரிக்க ஊறல் போட்டிருந்த செஞ்சேரி மேற்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகன் விஜயை (வயது 30) போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு இருந்த 250 லிட்டர் ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire