கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்

தேனி

தேனி உழவர் சந்தை அருகில் தேனி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை போலீசார் பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், பிடிபட்டவர் அல்லிநகரம் கோட்டைக்களம் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் பிச்சையாண்டி (வயது 25), தப்பி ஓடியவர் அம்பேத்கர் நடுத்தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சையாண்டியை கைது செய்தனர். மணிகண்டனை தேடி வருகின்றனர்.


Next Story