காரில் மண்எண்ணெய் கடத்திய வாலிபர் கைது

காரில் மண்எண்ணெய் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டர்.
திசையன்விளை:
உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் ஆனைகுடி விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 5 கேன்களில் 275 லிட்டர் மண்எண்ணெய் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் நடுவக்குறிச்சி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் தாமோதரன் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார், மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





