காற்றாலையில் காப்பர் ஒயர் திருடிய வாலிபர் கைது


காற்றாலையில் காப்பர் ஒயர் திருடிய வாலிபர் கைது
x

நெல்லை அருகே காற்றாலையில் காப்பர் ஒயர் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி வடக்கு தெருவை சேர்ந்த மகாராஜன் மகன் ரமேஷ் (வயது 28). இவர் நெல்லை அருகே கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் செல்லும் ரோட்டில் உள்ள காற்றாலையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 25-ந் தேதி காற்றாலையை சுற்றி பார்த்த போது அங்கு இருந்த சுமாா் 33 கிலோ காப்பர் ஒயரை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அய்யனாரூத்து பகுதியை சேர்ந்த கார்த்திக் (23) என்பவர் காப்பர் ஒயரை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து காப்பர் ஒயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 More update

Next Story