மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் லட்சுமிசுந்தரம் காலனியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 45). சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகே நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது. இதுகுறித்து வடக்கு போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது பாரதிபுரத்தை சேர்ந்த நாகராஜ் (20) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





