மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பேட்டை:
பேட்டை சேரன்மாதேவி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது சமீர் (வயது 20). இவர் தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை திருடியது ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் ராம் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து, மோட்டார் சைக்கிளை மீட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





