முன்னாள் ராணுவ வீரரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது


முன்னாள் ராணுவ வீரரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
x

முன்னாள் ராணுவ வீரரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள குவாகம் கிராமத்தைச் சேர்ந்த குணபாலன் என்பவருக்கு குப்புசாமி, வெங்கடேசன், ராமநாதன் என 3 மகன்கள் உள்ளனர். ராமநாதன் விருப்ப ஓய்வு பெற்ற துணை ராணுவ வீரர் ஆவார். இந்நிலையில் குடும்ப சொத்துக்கள் 3 பேருக்கும் சரிபாதியாக பாகம் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் பிரித்துக்கொடுக்கப்பட்டதில் 3 பேருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ராமநாதன் தனது மகனுக்கு அவருடைய பாகத்தை தான செட்டில்மெண்ட் செய்து கொடுத்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ளாத குப்புசாமி மகன் பிரவீன்காந்தி செந்துறை ரோட்டில் மாணிக்க நகரில் உள்ள வீட்டில் இருந்த ராமநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சென்ற ஆண்டு இருவருக்கும் அடிதடி நடந்து நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ராமநாதன் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பிரவீன்காந்தி மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் விசாரணை செய்து பிரவீன்காந்தி மீது வழக்குப்பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story