பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பனவடலிசத்திரம்:
தேவர்குளம் அருகே உள்ள மூவிருந்தாளி தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் என்ற துரை (வயது 28). இவர் ஒரு வீட்டின் முன்பு அடிக்கடி வந்து நின்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அந்த வீட்டை சேர்ந்த இளம்பெண், துரையை தட்டி கேட்டுள்ளார். அதில் ஆத்திரம் அடைந்த துரை அந்த பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளம் பெண் தேவர்குளம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, துரையை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





