குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

அம்பையில் குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை ஹை ஸ்கூல் ரோடு பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் ஸ்ரீ ராம் என்ற கணேசன் (வயது 24). இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவர் அடிதடி, கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், அம்பை இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். இதனை ஏற்று கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அம்பை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story