போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது
துடியலூர்
துடியலூர் அருகே வசிக்கும் 13 வயது சிறுமி வயிற்று வலியால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி விசாரணை நடத்தினார். விசாரணையில், அந்த சிறுமியின் உறவினரான வசந்த் (வயது 19) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வசந்தை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





