போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

புளியரை அருகே போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செங்கோட்டை:
புளியரை அருகே கீழப்புதூர் சத்துணவுக்கூட தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சுபாஷ் (வயது 24). இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்தநிலையில் அவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர், புளியரை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் தென்காசி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினா். பின்னர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுபாஷை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





