வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது


வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது
x

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருமெய்ஞானம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் திருமாவளவன்(வயது20). இவர் 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை தொடர்ந்து அந்த சிறுமியை யாருக்கும் தெரியாமல் அழைத்து சென்று அருகில் உள்ள ஒரு கோவிலில் வைத்து தாலிக்கட்டியுள்ளார். தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த திருமாவளவனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று குடவாசல் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த திருமாவளவனை போலீசார் கைது செய்து நாகை சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story