தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது


தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 April 2023 6:45 PM GMT (Updated: 19 April 2023 6:46 PM GMT)

செங்கோட்டையில் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை வாணியர் தெருவை சேர்ந்த குமார் என்பவருடைய மகன் ரஞ்சித் (வயது 23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (57) என்பவரை சாதி பெயரைச்சொல்லி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி நவநீதகிருஷ்ணன் செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் விசாரணை நடத்தி தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தார். பின்னர் அவர் செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story