கடன்சுமை காரணமாக ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

ராணிப்பேட்டை அருகே கடன்சுமை காரணமாக ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை
வாலாஜாப்பேட்டையை அடுத்த ஏகாம்பரநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவாநந்தம். இவரது மகன் அரிஹரன் (வயது 27). சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக கடன் சுமை காரணமாக அதிக அளவில் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மது அருந்திவிட்டு முகுந்தராயபுரம் ெரயில் நிலையத்தில் திடீரென ெரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில் கை மற்றும் கால்கள் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி ெரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story






