தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 28 Aug 2023 6:45 PM GMT (Updated: 28 Aug 2023 6:46 PM GMT)

கடலூரில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோடு சபாபதி நகரை சேர்ந்தவர் முருகன் மகன் மணிகண்டன் (வயது 27). தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் அவருக்கு உடல் நலம் சரியாகவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதையடுத்து அவரை பெற்றோர் மற்றும் அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story