தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

ஆரணியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி ஆரணிப்பாளையம் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் கணேஷ் (வயது 29). கார் சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று கணேசனுக்கு இன்னும் திருமணம் ஆகாததால் தந்தை நடராஜன், தாய் தனலட்சுமி ஆகியோர் கணேசனை குலதெய்வ கோவிலுக்கு சென்று வரலாம் என்று அழைத்தனர்.

அதற்கு நான் வரவில்லை என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணேஷ் இல்லை.

இந்த நிலையில் அதே பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டில் மாலையில் மின்விளக்கு போடுவதற்காக தனலட்சுமி சென்றார். அப்போது மேல்மாடியில் உள்ள அறையில் கணேஷ் தூக்குப்போட்டு கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து கணேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் நடராஜன் புகார் கொடுத்தாா். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story