தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் புதுக்காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் நவநீத கிருஷ்ணன் (வயது 19). கூலி தொழிலாளி. இவர் திருப்பூரில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் விடுமுறையில் சோலூர்மட்டத்துக்கு வந்த நவநீத கிருஷ்ணன், நேற்று இரவு 10 மணியளவில் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் மோகனசாந்தி சோலூர்மட்டம் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story