தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பெரிய குக்குண்டி கிராமத்தை சேர்ந்தவர் குப்பன், விவசாயி. இவரது மகன் வசந்த் (வயது 22). இவர் கலவையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி உடல்நலக்கோளாறு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தனது தந்தையிடம் அவர் கூறியதற்கு ஊருக்கு வரும்படி அவர் கூறியுள்ளார். இதனால் கடந்த 3-ந் தேதி வசந்த் பெரியகுக்குண்டி வந்தார். அவரை குப்பன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று மீண்டும் வீட்டில் விட்டுவிட்டு குப்பன் நிலத்திற்கு சென்றுவிட்டார்.

பின்னர் குப்பன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வசந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story