தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே உள்ள செங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் சக்திகுமார். இவரது மகன் ராஜ்குமார் (வயது 21). டிரைவர். இவர் கடந்த 2-ந்தேதி வீட்டில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமார் நேற்று சிசிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை சக்திகுமார் ரெகுநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story