இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

திருச்சி

மலைக்கோட்டை, மே.25-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக கூறி திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை திருச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் இ.ராகுல்காந்தி (வடக்கு), கே.ராகுல்காந்தி (தெற்கு) முன்னிலை வகித்தனர். இதில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு (என்கிற) லெனின் பிரசாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டனஉரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது, கட்சியினர் சீமானின் உருவப்படத்தை எரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 2 பெண்கள் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story