விழுப்புரம் ரெயில் நிலையத்தில் வாலிபர் பிணம்


விழுப்புரம் ரெயில் நிலையத்தில் வாலிபர் பிணம்
x
தினத்தந்தி 20 Dec 2022 6:45 PM GMT (Updated: 20 Dec 2022 6:46 PM GMT)

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார்.

விழுப்புரம்

விழுப்புரம் ரெயில் நிலைய 2-வது நடைமேடையில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த நபர் வைத்திருந்த துணிக்கடை பை ஒன்றில் மாத்திரைகளும், மருந்து சீட்டுகளும் இருந்தது. அதை கைப்பற்றி போலீசார் விசாரித்ததில் ஒரு மருந்துசீட்டில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா புளியரை இந்திரா நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 35) என்றும் அவர், திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டு 14-ந் தேதி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரிடம் ரெயிலில் பயணம் செய்ததற்கான பயணச்சீட்டு ஏதும் இல்லை. அவர் எப்படி விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்தார் என்றும், அவர் இறந்ததற்கான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story