குடும்பத் தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


குடும்பத் தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

குடும்பத் தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் ஆயில் மில் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 30). இவர் தச்சு வேலை செய்து வந்தார். இவரது மனைவி தைரியலட்சுமி (30). இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பழனிசாமி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வழக்கம் போல் நேற்று முன்தினம் பழனிசாமி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியை அடித்து சித்திரவதை செய்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த தைரியலட்சுமி கணவர் மீது திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மகளிர் போலீசார் பழனிசாமியை அழைத்து விசாரணை செய்து குடிப்பழக்கத்தை விடுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் இருவரும் வீட்டுக்கு சென்றனர். அன்று மாலை தைரியலட்சுமி தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றுவிட்டார்.

வீட்டில் தனியாக இருந்த பழனிசாமி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகளை அழைத்து கொண்டு தைரியலட்சுமி வீட்டுக்கு வந்தபோது கணவர் தூக்கில் தொங்கியதை கண்டு கதறி துடித்தார்.

மேலும் இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருவள்ளூர் டவுன் போலீசார் உயிரிழந்த பழனிசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story