மின்சாரம் தாக்கி வாலிபர் காயம்

நெல்லையில் மின்சாரம் தாக்கி வாலிபர் காயம் அடைந்தார்.
நெல்லை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகை செல்லும் பகுதியில் நேற்று இரவு பேனர் கட்டும் பணி நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் (வயது 25) என்பவர் மின்சாதனம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் தரையில் தோண்டினார். அப்போது இரும்பு கம்பி மின்ஒயரில் குத்தியதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சேதம் அடைந்த ஒயரை சரி செய்து, மின்வினியோகத்தை சீரமைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





