மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி


மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
x

கீரனூர் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.

புதுக்கோட்டை

வாலிபர் பலி

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே குன்றாண்டார்கோவிலை சேர்ந்தவர் மாரிக்கண்ணு. இவரது வீட்டின் முன்பு புதிதாக பால் கடை அமைப்பதற்கு கட்டிடத்தின் மேலே கூரை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில், உப்பிலியக்குடியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சதீஷ் (வயது 32) மற்றும் அவரது நண்பர் சுரேஷ்குமார் ஆகிய 2 பேரும் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சதீஷ் இரும்பு கம்பியை மேலே தூக்கிய போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த மின்சார கம்பியில் இரும்பு கம்பி பட்டது. இதில் சதீஷ் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த உடையாளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story