மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்து உள்ள தனக்கன்குளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கார்த்திக் கண்ணன் (வயது 33). இவர் அதே பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கான்கிரீட் பலகையினை பிரித்ததாக தெரிகிறது. அப்போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருநகர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும்வழியிலேயே கார்த்திக் கண்ணன் இறந்ததாக தெரிவித்தார்.இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





