மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 1 Nov 2022 6:45 PM GMT (Updated: 1 Nov 2022 6:45 PM GMT)

வாசுதேவநல்லூரில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூரில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

வாலிபர்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பாலசந்திர விநாயகர் கோவில் தெருைவ சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன் மகன் சுரேஷ் (வயது 35). கூலித்தொழிலாளி.

இவருக்கும் மேலகடையநல்லூரைச் சேர்ந்த முத்துப்பிரியா என்பவருக்கும் திருமணமாகி வெபிசா முகி, கமுபிசுகி ஆகிய இரண்டு பெண் குழந்தை உள்ளனர்.

நேற்று மதியம் 1 மணி அளவில் பாலசந்திர விநாயகர் கோவில் பகுதிகளை சுரேஷ் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அறுந்து கீழே கிடந்த மின் கம்பி மீது கை பட்டதில் தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து சுரேஷ் தாயார் கோமதி தாய் வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

பரிதாபம்

தகவல் அறிந்ததும் மின்சாரவாரிய அதிகாரிகள், போலீசார், வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர் சுரேஷ் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவிலை சுத்தம் செய்வதற்கு சென்ற இடத்தில் மின்சார தாக்கி வாலிபர் பரிதாபமாக பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story