நாட்டு துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொலை


நாட்டு துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொலை
x

மங்களமேடு அருகே கள்ளத்தொடர்பு காரணமாக நாட்டு துப்பாக்கியால் சுட்டு வாலிபரை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்

கொலை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, மங்களமேடு அருகே உள்ள நம்பியூர் கிராமம் நரியோடையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ரஜினி(வயது 45) இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அல்லித்துரை மகன் அஜித்(26) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த ரஜினி, அஜித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த ரஜினி, தான் உரிமம் இன்றி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து அஜித்தை சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அஜித்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வலைவீச்சு

ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நாட்டுத் துப்பாக்கியுடன் தலைமுறைவான ரஜினியை வலைவீசி தேடி வருகின்றனர். விசாரணையில், ரஜினிக்கு, அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அது குறித்து அஜித் மற்றவர்களில் தெரிவித்ததால் ஆத்திரத்தில் அஜித்தை ரஜினி சுட்டுக்கொலை செய்தது தெரிய வந்தது.


Next Story