தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

அம்மாப்பேட்டை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை

அம்மாப்பேட்டை அருகே செண்பகபுரம் கிராமம், கீழத்தெருவை சேர்ந்தவர் சரவணமுத்து மகன் மகேந்திரன் (வயது20). இவர் கடந்த மாதம் 21 -ந் தேதி வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது அவரை பூச்சி கடித்துவிட்டது. இதனால் மகேந்திரன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவர் ஒருவித பயத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த மகேந்திரன் சம்பவத்தன்று செண்பகபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான போர் செட் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story