தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

திருவையாறு அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு அருகே உள்ள கீழதிருப்பந்துருத்தி நடுப்படுகை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராசு. இவருடைய மகன் மனோஜ்குமார்(வயது23). இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனது தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டார். அப்போது அவரது தந்தை ராசு உனது அண்ணன் மற்றும் 2 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்த பின் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.இதனால் மன உளைச்சலில் இருந்த மனோஜ்குமார் வாழை கொல்லையில் உள்ள கீற்று கொட்டகையில் உள்ள மூங்கிலில் லுங்கியால் தூக்குப்போட்டுக்கொண்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவேஇறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story