தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
ஊட்டி அருகே எமரால்டு பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகன் ரமேஷ் (வயது 23). இவர் தனியார் பள்ளி வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே அவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ரமேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த எமரால்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





