வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

சங்கரன்கோவில் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே கே.ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் காளிராஜ் (வயது 24). இவர் சண்முகநல்லூரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காளிராஜின் தாயார் உடல் நலக்குறைவால் இறந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த காளிராஜ் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், சின்னகோவிலாங்குளம் போலீசார் விரைந்து சென்று, காளிராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story