இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம்


இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம்
x

திருப்பத்தூரில் இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களால் மாவட்ட அளவிலான இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம் திருப்பத்தூரில் நடைபெற்றது. திட்ட அலுவலர் ரவிவர்மன் வரவேற்றார். ஊர்வலத்தை மாவட்டக்கல்வி அலுவலர் வெங்கடேச பெருமாள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி பழனிசாமி ரோடு, காவல் நிலையம் ரோடு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, அரசு மருத்துவமனை ரோடு வழியாக அரசு ஆண்கள் பள்ளியை வந்தடைந்தது. இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ராஜன், ஜெயவேலு, பள்ளி துணை ஆய்வாளர் தாமோதரன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்துகொண்டு அப்துல்கலாமின் பொன்மொழிகளை கோஷமிட்டு சென்றனர். முடிவில் திட்ட அலுவலர் தமிழரசி நன்றி கூறினார்.


Next Story