வாலிபருக்கு பாட்டில் குத்து


வாலிபருக்கு பாட்டில் குத்து
x

மயிலாடுதுறை அருகே வாலிபரை பாட்டிலால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை பனம்பள்ளி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவருைடய மகன் சிங்காரவேலன் (வயது25). அதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் தர்மராஜ். இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த சிங்காரவேலனை தனது நண்பர்களுடன் சேர்ந்து தர்மராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தர்மராஜ் தனது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து சிங்காரவேலனின் முதுகில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த சிங்காரவேலன் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜ் மற்றும் அவரது நண்பரான பண்டரிநாதன் மகன் வெங்கடேசன் (33) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் பழனி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story