வாலிபர் மீது தாக்குதல்


வாலிபர் மீது தாக்குதல்
x

அம்மாப்பேட்டை அருகே வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை;

அம்மாப்பேட்டை அருகே சாலியமங்கலம், ெரயில்வே தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் நவீன் (வயது21). சம்பவத்தன்று இரவு நவீன் சாலியமங்கலத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சாலியமங்கலம் மேலத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிவா என்ற அன்பரசன் (30) முன் விரோதம் காரணமாக நவீனிடம் தகராறு செய்து, அவரை கம்பியால் தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நவீன் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story