மதுபானம் விற்ற வாலிபர் கைது

நெமிலி அருகே மதுபானம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 200 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெமிலியை அடுத்த சிறுணமல்லி பகுதியில் நேற்று நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புத்தேரி கிராமத்தில் வாலிபர் ஒருவர் மதுபானம் விற்பனைசெய்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை பிடித்து அவரிடமிருந்து 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் சிறுணமல்லி கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் அருண் (வயது 23) என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





