மதுவிற்ற வாலிபர் கைது

ஜோலார்பேட்டையில் மதுவிற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெரு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் வாலிபர் ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதனையெடுத்து போலீசார் அவரை கைது செய்து 55 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் அதேப் பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் ரஞ்சித் (வயது 29) என்பது தெரிய வந்தது. அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





