திருச்சியில் நாளை மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி


திருச்சியில் நாளை மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி
x

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நாளை நடக்கிறது.

கரூர்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. அதன்படி பள்ளி மாணவ-மாணவிகளுக்கான டென்னிஸ் போட்டி நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான டென்னிஸ் போட்டி 27 மற்றும் 28-ந் தேதி நடக்கிறது. கரூர் மாவட்டத்தின் சார்பாக இணையதளத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் நாளை காலை 7 மணியளவில் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் சான்றிதழ் சரிபார்த்திட நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு தலா ஒரு அணி மேலாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் உரிய ஆவணங்களை எடுத்து வர வேண்டும். ஆவணங்கள் இல்லாதவர்கள் கண்டிப்பாக போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு தினப்படி மற்றும் பயணப்படி வழங்கப்படும். பயணச்சீட்டினை அவசியம் கொண்டு வர வேண்டும். விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாதாரண தங்குமிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு திருச்சி 9952574154, புதுக்கோட்டை 09385817690, 7825912554 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் உமாசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story