தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி


தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
x
தினத்தந்தி 15 March 2021 3:25 PM GMT (Updated: 15 March 2021 3:25 PM GMT)

தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டமன்ற தொகுதியானது அ.தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்தநிலையில் இன்று பாஜக மாநில மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்கு வந்தார். பின்னர் ஊட்டியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த 13 நிர்வாகிகளிடம், தனியார் மண்டபம் ஒன்றில் தனித்தனியாக நேர்காணல் நடத்தினார்.  தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

அ.தி.மு.க., பா.ஜனதா கட்சி கூட்டணி இடையே குழப்பம் எதுவும் இல்லை. 3 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அல்லது நாளைஅறிவிக்கப்படுவார்கள்.

வருகிற 19-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்களை மாற்றுவது குறித்து வதந்தி பரவி வருகிறது.  ஊட்டியில் பா.ஜ.க. வேட்பாளர்தான் போட்டியிடுவார். தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story