"நான் இருக்கும் வரை தாமரை மலராது" - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு


நான் இருக்கும் வரை தாமரை மலராது -  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
x
தினத்தந்தி 26 March 2021 6:17 AM GMT (Updated: 26 March 2021 6:17 AM GMT)

நான் இருக்கும் வரை தாமரை மலராது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

கோவை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 

பிரசார கூட்டத்தில் பேசிய சீமான், அனைவரையும் ‘பி’ டீம் என கூறுகின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் உண்மையான ’பி’ டீம் திமுக - தான். சாரணர் இயக்கத்து தேர்தலில் கூட வெல்லமுடியாத ஒருவரை சட்டமன்றத்திற்கு கூட்டி சென்றவர்கள் இவர்கள் தான். பாஜக உடன் திமுக மறைமுக உறவில் உள்ளது. நானும் நாம் தமிழரும் இருக்கும் வரை இம்மண்ணில் தாமரை மலராது, பாஜக வரமுடியாது’ என்றார்.

Next Story