வீட்டுப்பாடம் செய்யாததால் 15 வயது மாணவி சிறைக்கு செல்ல அமெரிக்க கோர்ட் தீர்ப்பு


வீட்டுப்பாடம் செய்யாததால் 15 வயது மாணவி சிறைக்கு செல்ல அமெரிக்க கோர்ட் தீர்ப்பு
x
தினத்தந்தி 18 July 2020 1:15 PM IST (Updated: 18 July 2020 1:15 PM IST)
t-max-icont-min-icon

வீட்டுப்பாடம் செய்யாததால் 15 வயது மாணவி சிறைக்கு செல்ல அமெரிக்க கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

வாஷிங்டன்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் இணையம் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க - ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த கிரேஸ் என்ற = 15 வயது சிறுமி வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை என கூறி கடந்த மே மாதம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளார் ஒரு நீதிபதி.

இந்த மாணவியின் வழக்கை விசாரித்த ஓக்லாந்து குடும்ப நீதிமன்றம், அந்த மாணவி வீட்டுப்பாடத்தை முடிக்காமல் நன்னடத்தை விதிகளை மீறி இருக்கிறார் என்றும், அவர் மீதுள்ள முந்தைய குற்றச்சாட்டுகளை வைத்து அவர் இந்த சமூகத்திற்கான அச்சுறுத்தல் என்றும் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு குறித்து வெளிப்படையாக எந்த கருத்தையும் நீதிபதி மேரி எல்லன் ப்ரெமென் தெரிவிக்கவில்லை.

இதனை எதிர்த்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிறுமிக்கு ஆதரவாக பள்ளி மற்றும் நீதிமன்ற வாசலில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

மிச்சிகன் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு மறு ஆய்வு செய்யப்படும் என்று வியாழனன்று தெரிவித்துள்ளது.

1 More update

Next Story