அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு


அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு
x

Image Courtacy: AFP

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோ பைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதற்கிடையே, அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டார். என அதிபரின் டாக்டர் கெவின் ஓகானர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஜூலை 26ஆம் தேதி, செவ்வாய் அன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்ட பிறகு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜூலை 30ஆம் தேதி நேற்று காலை மீண்டும் பரிசோதனை செய்துகொண்டார். அதில் "மீண்டும்" கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார் என்று டாக்டர் குழு தெரிவித்துள்ளது.


Next Story