பிரதமர் மோடிக்கு பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து


பிரதமர் மோடிக்கு பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து
x
தினத்தந்தி 25 May 2019 2:58 AM GMT (Updated: 25 May 2019 2:58 AM GMT)

மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்ற பிரதமர் மோடிக்கு, பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பாரீஸ்,

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது. இதனால், பிரதமராக 2-வது முறையாக மோடி பதவியேற்க இருக்கிறார். பிரதமர் மோடிக்கு உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜிங்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்பட உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில், பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இந்த தகவலை வெளியிட்ட பிரான்சு வெளியுறவுத்துறை மந்திரியின்  செய்தி தொடர்பாளர்  மேலும் கூறியதாவது:- பிரான்சும் இந்தியாவும் உறுதியான  ஒத்துழைப்பை கொண்டுள்ளன.  நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உலகின் பாதுகாப்பு நிலைத்தன்மை ஆகியவற்றுக்காக இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். நீடித்த வளர்ச்சியை ஊக்குவிப்போம்”  என்றார். 


Next Story