அபுதாபி விமான நிலையத்தில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் - ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு


அபுதாபி விமான நிலையத்தில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் - ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Feb 2022 10:56 PM GMT (Updated: 21 Feb 2022 10:56 PM GMT)

அபுதாபி விமான நிலையத்தில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

அபுதாபி,

ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் அனைத்து விமான நிலையங்களில் இருந்தும் இந்தியாவுக்கு செல்லும் பயணிகள், இந்தியாவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் பயணத்துக்கு 72 மணி நேரத்து முன்பு பி.சி.ஆர். பரிசோதனை செய்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு அபுதாபி விமான நிலையத்தில் இருந்து செல்லும் பயணிகளுக்கு பொருந்தாது. அபுதாபி அரசுத்துறை வழிகாட்டுதல் அடிப்படையில், அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்துக்குள் செய்துள்ள பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை வைத்திருக்க வேண்டும். இதேபோல் அல் அய்ன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளும் பி.சி.ஆர். பரிசோதனைகளை செய்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story