பேச்சுவார்த்தை தோல்வி 3-ம் உலகப்போருக்கு வழிவகுத்துவிடும் - உக்ரைன் அதிபர் எச்சரிக்கை


பேச்சுவார்த்தை தோல்வி 3-ம் உலகப்போருக்கு வழிவகுத்துவிடும் - உக்ரைன் அதிபர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 March 2022 11:04 PM GMT (Updated: 21 March 2022 11:21 PM GMT)

பேச்சுவார்த்தை தோல்வி 3-ம் உலகப்போருக்கு வழிவகுத்துவிடும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கீவ்,

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 3 வாரங்களை கடந்து நீண்டு கொண்டிருக்கும் அதே வேளையில் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்கின்றன. ஆனால் இதுவரை நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகளில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி 3-ம் உலகப்போரை ஏற்படுத்தும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது இதுபற்றி அவர் கூறுகையில், “ரஷிய அதிபர் புதினுடன் நேரடியாகப் பேசத் தயாராக இருக்கிறேன், மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகள்தான் ஒரே வழி என்று நம்புகிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், “ரஷியாவின் படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தையின் தோல்வி 3-ம் உலகப்போரை ஏற்படுத்தும். உக்ரைன் நேட்டோ உறுப்பினராக இருந்தால், இந்த போர் தொடங்கியிருக்காது என்று தான் நம்புகிறேன். நேட்டோ உறுப்பினர்கள் எங்களை கூட்டணியில் பார்க்க தயாராக இருந்தால், அதை உடனடியாக செய்யுங்கள். ஏனென்றால், மக்கள் தினந்தோறும் இறக்கின்றனர்” எனவும் கூறினார்.

Next Story