போரை ஒருவரும் விரும்பவில்லை; ஆனால் அணு ஆயுத அச்சுறுத்தல் நீடிக்கிறது: ரஷியா

போரை ஒருவரும் விரும்பவில்லை என்றும் எனினும் அணு ஆயுத அச்சுறுத்தலானது தொடர்ந்து நீடிக்கிறது என்றும் ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் கூறியுள்ளார்.
மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷியா 31வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இரு புறமும், குடிமக்கள், ராணுவ வீரர்கள் என ஆயிரக்கணக்கில் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.
இந்த போர் அணு ஆயுத போராக வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் இன்று பதிலளித்து பேசும்போது, ஒருவரும் எந்த போரையும் விரும்பவில்லை. ஆனால், மனித நாகரிகத்திற்கு அணு ஆயுத போர் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
அணு ஆயுத வளர்ச்சியானது 20 மற்றும் 21ம் நூற்றாண்டுகளில் எண்ணற்ற பெரிய மோதல்களை தடுத்து உள்ளது. பல நிபுணர்கள் கூறுவது போல் இது சரியே. அது உண்மையும் கூட என கூறியுள்ளார்.
நேட்டோவின் அணு ஆயுதங்கள் ரஷிய பிராந்திய பகுதிகளை இலக்காக கொண்டு உள்ளன. அதனால், ரஷிய ராணுவமும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை நோக்கி குறிபார்த்து கொண்டிருக்கின்றன. அதனால், பொறுப்புடன் இருக்கும் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story