பாகிஸ்தான்: பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 22 போ் பலி


பாகிஸ்தான்: பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 22 போ் பலி
x

பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் பெண்கள்,குழந்தைகள் என சுமாா் 22 போ் உயிாிழந்து உள்ளனா்.

கராச்சி,

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லோராலியாவில் இருந்து சோப் நகருக்கு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அதில் பயணிகள் பலா் பயணித்து கொண்டிருந்தனா்.

அப்போது அக்தா் சாய் என்ற மலைப்பகுதியில் வேன் சென்ற போது, அங்கிருந்த வளைவில் திரும்பும் போது டிரைவாின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணித்த அனைவரும் உயிாிழந்தனா்.

இந்த விபத்து தொடா்பாக அதிகாாி ஒருவா் கூறுகையில், அக்தா் சாய் மலை உச்சியில் இருந்து வேன் மிகவும் ஆழமான பள்ளத்தில் விழுந்து உள்ளது. இதனால் மீட்பு பணிகள் மிகவும் கடினமாக உள்ளது. இதுவரை 10 போின் உடல்களை மீட்டுள்ளதாக அவா் தொிவித்தாா். அக்தா் சாய் மலை 1,572 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு பழங்குடிப் பகுதி ஆகும்.


Next Story