இனி செய்தி வாசிப்பாளர்களின் கண்கள் மட்டுமே வெளியே தெரியும்; முழு உடலையும் மறைக்கும் ஆடை அணிய தலீபான் அரசு உத்தரவு!


இனி செய்தி வாசிப்பாளர்களின் கண்கள் மட்டுமே வெளியே தெரியும்; முழு உடலையும் மறைக்கும் ஆடை அணிய தலீபான் அரசு உத்தரவு!
x

ஆப்கானிஸ்தான் பெண் செய்தி வாசிப்பாளர்கள் பர்தாவால் மூடப்பட்ட முகத்துடன் திரையில் வர வேண்டும் என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பெண்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதன்படி, ஆப்கானிஸ்தான் செய்தி சேனல்களில் பணி புரியும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் இனி பர்தாவால் மூடப்பட்ட முகத்துடன் திரையில் வர வேண்டும் என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது, தங்கள் முகம் உட்பட முழு உடலை மறைக்கும் வகையிலான பாரம்பரிய பர்தா உடையை அணிய வேண்டும் என்று ஆப்கன் அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை ஏற்று தற்போது ஆப்கானிஸ்தான் செய்தி சேனல்களில், திரையில் தோன்றும் பெண்கள் முகங்களை மூடிக்கொண்டே செய்தி வாசிப்பிலும், தொகுத்து வழங்குவதிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு அங்குள்ள பெண் செய்தி வாசிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், முகத்தை மறைக்கும்படியான ஆடையை அணியாத பெண் தொகுப்பாளர்களுக்கு வேறு பணி வழங்க வேண்டும் அல்லது அவர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆப்கன் அரசு மறைமுக அழுத்தம் தருவதாக அங்குள்ள பெண் செய்தியாளர்கள் கூறி உள்ளனர்.

முகம் உட்பட முழு உடை மறைக்கும் வகையில் ஆடை அணிய வேண்டும். இல்லையென்றால் அந்நாட்டின் பெண் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஆப்கன் அரசு திட்டமிட்டுள்ளது.

அதேபோல ஆப்கன் அரசில் பணிபுரியும் ஆண்கள் தங்கள் மனைவிகள் அல்லது மகள்கள் ஆடை விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story